பெண் மருத்துவர் கொலை – பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!!

priyanga reddi murder
priyanga reddi murder

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் கடந்த 27ம் திகதி கால்நடை பெண் வைத்தியர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் குற்றச்சாட்டப்பட்டவர்கள் 4 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க விரைவு நீதிமன்ற நீதிபதி அனுமதியளித்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று இரவு குற்றவாளிகள் 4 பேரையும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் 4 பேரும் பொலிஸாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றனர்.

இதையடுத்து அவர்களை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

பொலிஸாரின் இந்த செயல் பொது மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.