சட்டவாட்சியை நிலைநிறுத்துமாறு இலங்கைக்கு சுவிஸ் கண்டனம்

swiss 00
swiss 00

சுவிஸ் தூதரக பணியாளர் விடயத்தில் சட்டவாட்சியை பின்பற்றுகின்ற இலங்கை முறையான கையாளுகையை மேற்கொள்ள வேண்டும் என சுவிசர்லாந்து மத்திய வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது.

தேசிய சட்டம் மற்றும் சர்வதேச நீதிப் பொறிமுறைகளுக்கிணங்கி செயற்படுமாறும் சுவிஸ் மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தூதரக பணியாளர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பணியாளரின் உரிமைகள் சிறப்பாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் பணியாளரின் மோசமான உடல்நிலைக்கு உரிய கவனம் செலுத்துமாறும் இலங்கை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்த உயர்மட்ட வழக்கில், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் ஒரு நாடு என்ற இலங்கையின் நற்பெயருக்கு ஆபத்து உள்ளது என்பதை சுவிட்சர்லாந்து வலியுறுத்த விரும்புகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.