கொரோனா தொற்றை அறிய புதிய வழி

2 eew
2 eew

கொரோனா வைரஸ் தொற்றை கைப்பேசிகளின் மூலம் கண்டறியும் புதிய செயற்றிட்டமொன்றை அவுஸ்திரேலிய அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

குறித்த செயற்றிட்டமானது ஏற்கனவே சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு அவுஸ்திரேலியாவில் அந்நாட்டு சுகாதார அமைச்சர் அறிமுகப்படுத்தி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த செயலியினை அதிகளவான மக்கள் பதிவிறக்கம் செய்துவருகின்றனர். இதுவரை, ஒரு மில்லியனுக்கு அதிகமான அவுஸ்திரேலிய மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.