உலக அளவில் நான்கரை இலட்சத்தைக் கடந்தது உயிரிழப்பு!

shutterstockCoronavirus1200x733

உலக அளவில் பெரும் மனித அழிவை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக மரணித்தோரின் எண்ணிக்கை இதுவரை நான்கரை இலட்சத்தைக் கடந்துள்ளது.

உலக நாடுகளில் நேற்று ஒரே நாளில் ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 872 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிக்கப்ட்டவர்களின் எண்ணிக்கை 84 இலட்சத்து 270 பேர் ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 264ஆகப் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 51 ஆயிரத்து 265ஆகப் பதிவாகியுள்ளது.

அத்துடன், இதுவரை வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட 84 இலட்சம் பேரில் 44 இலட்சத்து 14 ஆயிரத்து 991பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.