லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 4,000 பேர் காயமடைந்ததாகவும் லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று செவ்வாயன்று ஏற்பட்ட இந்த வெடி விபத்தால் தலைநகரம் குலுங்கியதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
“இப்போது வரை பலர் காணவில்லை. மக்கள் தங்களது அன்புக்குரியவர்களைப் பற்றி அவசர சிகிச்சைப் பிரிவைக் கேட்கிறார்கள், மின்சாரம் இல்லாததால் இரவில் தேடுவது கடினம் ”என்று அந்த நாட்டின் சுகாதாரஅமைச்சர் ஹமாத் ஹசன் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
“நாங்கள் ஒரு உண்மையான பேரழிவை எதிர்கொள்கிறோம், சேதங்களின் அளவை மதிப்பிடுவதற்கு நேரம் தேவை.”
பெய்ரூட் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 க்கும் அதிகமாக உள்ளது என்று சுகாதார அமைச்சர் கூறுகிறார்
வெடிப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. ஆறு ஆண்டுகளாக துறைமுகத்தில் ஒரு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,700 தொன் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டே வெடிவிபத்தின் காரணம் என கூறப்படுகிறது.
வெடிப்பைத் தொடர்ந்து லெபனான் ஜனாதிபதி மைக்கேல் அவுன் நாட்டின் உயர் பாதுகாப்பு கவுன்சிலை கூட்டினார்.