கொரோனா தெற்றால் உலகம் முழுவதிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. மேலும் 2.70 லட்சம் பேர் உயிரிழந்துள்ளார்கள். உலக நாட்டு மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
மேலும் ஹாலிவுட் சினிமா பிரபலங்கள் சிலர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்கள். பலரும் இந்நோய் தொற்றால் வேலையை இழந்து வறுமையில் வாடுவோருக்கு சினிமா நடிகர்கள், நடிகைகள் உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் விசாகபட்டினத்தில் தொழிற்சாலையிலிருந்து விசவாயு கசிந்து வெளியேறியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் குறிப்பிடத்தக்கது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்நிலையில் நடிகை ரகுல் விசவாயு விபத்து குறித்த செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். இதனால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் என் ஆறுதல் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பாதிக்கப்பட்ட பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று நம்புகிறேன். எனது விசாக் மக்களே பாதுகாப்பாக இருங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல நடிகர் மகேஷ் பாபு , ஜெயம் ரவி, நடிகை தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரும் பதிவிட்டுள்ளார்கள்.