தற்போது உலகில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று மத்தியில் நடிகை மேக்னாராஜின் கணவரும், நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் திடீரென மரணமடைந்தது திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேக்னா ராஜ் ‘கிருஷ்ண லீலை’, ‘உயர்திரு 420’, ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘நந்தா நந்திதா’ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர்.
கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுக்கும் , மேக்னா ராஜுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இருவரும் பெங்களூருவில் வசித்து வந்தார்கள். சிரஞ்சீவி சார்ஜா, நடிகர் அர்ஜுனின் உறவினர் ஆவார்.
கன்னட பட உலகில் முன்னணி நடிகராக இருந்தார்.
இவர், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
அவருக்கு வயது 39. அவருடைய உடலுக்கு கன்னட பட உலகை சேர்ந்த நடிகர், நடிகைகள், பட அதிபர்கள், டைரக்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.