நீதியை காக்க வேண்டும்!முதல்வருக்கு கமல் ஹாசன் வேண்டுகோள்!!

kamal
kamal

சாத்தான்குளம் வழக்கை மக்கள் மறந்துவிடுவார்கள் என காத்திராமல் நீதியை காக்க வேண்டும் என முதல்வருக்கு கமல் ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சாத்தான்குளம் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே! குற்றவாளிகள் மேல் ஐபிசி 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள். 

சிபிஐ விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள். காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி. இவ்வாறு கமல் கூறி உள்ளார்.