இந்தியாவின் 71வது குடியரசு தினமான இன்று (26) சென்னை காமராஜர் சாலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றினார்.
மெரினாவில் உள்ள போர் நினைவுச் சின்னத்திற்கு வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவருடன் முப்படை அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, ஆளுநர் விழா நடக்கும் இடத்திற்கு வருகை தந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் ஆளுநரை வரவேற்றனர்.