ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
‘பேட்ட’ படத்தைத் தொடர்ந்து ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இதையடுத்து ரஜினி இமயமலை சென்றுவிட்டார். தர்பார் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளும், புகைப்படங்களும் அவ்வப்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வந்தன. தற்போது தர்பார் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட மேலும் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்தில் உள்ள கோயில்களில் பிரார்த்தனை செய்த ரஜினி, தரிசனத்துக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில், ‘தர்பார்’ படப்பிடிப்பை முடித்துவிட்டோம். படத்தின் வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்ய இங்கு வந்தேன்” என்று குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.