பரியேறும் பெருமாள்’ படத்துக்கு பிறகு நடிகர் கதிர், விஜய்யுடன் இணைந்து ‘பிகில்’ படத்தில் நடித்திருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை அட்லி இயக்கியிருந்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தை அடுத்து ‘ஜடா’ என்னும் படத்தில் கதிர் நடித்துள்ளார். போயட் ஸ்டுடியோஸ் சார்பில் விக்னேஷ் ராஜகோபால் தயாரித்துள்ள இப்படத்தை குமரன் இயக்கியுள்ளார். படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கால் பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் கதிருக்கு ஜோடியாக ரோஷினி நடிக்க, யோகி பாபு, சமுத்திரகனி, ஏ.பி.ஸ்ரீதர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.