தமிழ் சினிமாவில் கற்பனை திரைப்படங்கள் அரிதாக இடம்பெற்று வருகின்ற நிலையில் அவை அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதுண்டு. அந்தவகையில் தமிழ் சினிமாவில் புதிதாக தயாராகும் கற்பனை திரைப்படம் ஆலம்பனா.
அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாடுகின்ற தற்போதைய சூழலுக்கேற்ற வகையில் வணிக ரீதியில் ‘ஆலம்பனா’ எனும் படம் தயாராகிறது.
இப்படத்தை பாரி.கே.விஜய் எழுதி இயக்குகிறார். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய தரமான படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிவர்.
கதாநாயகனாக வைபவ் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பார்வதி நடிக்கிறார்.
இதுவரை வந்த வைபவ் படங்களிலே ஆலம்பனா தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது.
முனிஷ்காந்த், திண்டுக்கல் ஐ லியோனி, காளிவெங்கட், ஆனந்த்ராஜ், முரளிசர்மா, கபீர் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
ஹிப்ஹாப் ஆதி இசை அமைக்க, வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.