ஜனாதிபதியாக இன்று பதவியேற்றுள்ள கோத்தாபய ராஜபக்ச அரச அலுவலகங்களில் பயன்படுத்துவதற்கான தனது அதிகாரபூர்வ இலச்சினையை வெளியிட்டுள்ளார்.
அரச அலுவலகங்களில் இனிமேல் தனது படங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் தனது அதிகாரபூர்வ இலச்சினையை பயன்படுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இலட்சினையானது பௌத்தம் மற்றும் தேசத்தின் செல்வாக்கு, சமூக நல்லுறவு, இன நல்லிணக்கம், பாதுகாப்பு ஆகியவைகளை உள்ளடக்கும் வகையில் அமையப்பெற்றுள்ளது.
இலங்கையின் ஒவ்வொரு ஜனாதிபதியும் தனது செயலகத்திற்கான கொடியை உருவாக்குவது வழமை. அதனடிப்படையிலேயே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் தனது கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார்.