சுமந்திரனால் தடுக்கப்பட்ட இழுவைமடி தடைசட்டமூலம்

Sumanthiran 2
Sumanthiran 2

இலங்கையில் இழுவைமடி தடைசட்டமூலத்தை கொண்டுவர முயற்சி செய்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனே அந்த சட்டமூலம் நடைமுறைக்கு வராமல் போனதற்கும் காரணம் என வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் இழுவைமடித் தடைசட்டமூலத்தினை நடைமுறைக்கு பொண்டு வந்து எமது னடல் வளத்தினை பாதுகாத்து தருமாறு கோரியிருந்த நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அந்த சட்டமூலத்தை கொண்டுவர பெரும் பங்காற்றிருந்தார். எனினும் அது நடைமுறைக்குவரவில்லை.

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ்ப்பாண மாநகரசபையில் போட்டியிட்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆர்னோல்டை வெற்றிபெற வைக்கவும் அவருக்கு குருநகர் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொடுக்கவும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உதவி செய்துள்ளார்.

அப்போதையகடற்தொழில் அமைச்சர் ஊடாக குறித்த சட்டமூலத்தை இப்போதைக்கு நடைமுறைக்கு கொண்டுவர வேண்டாம் என தெரிவித்து எம்மை ஏமாற்றியுள்ளார்.

குறிப்பாக வட மாகாணத்தை பொறுத்தவரையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையினால் எமது கடல் வளம் மிகமோசமாக பாதிப்படைந்து வருகின்றது. இதனால் எமது பகுதிகளில் உள்ள மீன் இனங்கள் வேகமாக அழிவடைந்து வருகின்றன.

வட மாகாண கடற்தொழிலாளர்களை பொறுத்தவரையில் சட்டவிரோதமான முறைமைகளை பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுபவர்களினால் பாதிப்படைகின்றோம். அதிலும் பார்க்க தென்னிலங்கை மீனவர்கள் எமது கடல் பகுதியில் மீன்பிடியில் நவீன உபகரணங்களுடன் தொழிலில் ஈடுபடுவதனால் பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றோம்.

வடக்கில் குறிப்பாக முல்லைத்தீவு மாவடடத்தில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்கள் மிகவும் அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.