யாழ்.மாநகர சபை அமர்வில் குழப்பம்

Jaffna Municipal Council
Jaffna Municipal Council

யாழ்.மாநகர சபையின் அமர்வில், யாழ்.மாநகரசபைக்குட்பட்ட சந்தைகளை குத்தகைக்கு எடுப்பவர்களே சுத்தப்படுத்தும் வேலையினை முன்னெடுக்க வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தீர்மானம் தொடர்பில் உரையாற்றியபோது, மாநகர முதல்வருக்கும், ஈ.பி.டி.பி கட்சியினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் முன்னாள் முதல்வரால் கொள்வனவுசெய்யப்பட்ட லப்டொப் எங்கே என்றும் அத்தோடு அலுவலகத்திற்கு கொள்ளவு செய்யப்பட்ட ஏ.சி.எங்கே, சபைக்கு செலுத்த வேண்டிய 6இலட்சம் ரூபா செலுத்தாமல் இருப்பதற்கான காரணம் என்ன போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரு தரப்பும் வார்த்தை மோதலில் ஈடுபட்டமையின் காரணமாக சபை அமைதியின்மை காணப்படுகிறதாக தெரிவிக்கப்படுகிறது.