போதைப்பொருள் விற்பனைக்கெதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

DSC3850
DSC3850

வவுனியா தேக்கவத்தை கிராமத்தில் கஞ்சா மற்றும் குடு போன்ற போதைப்பொருள் விற்பனை செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸாரிற்கு அறிவித்தும் இதுவரைக்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்படுபவர்கள் 2 அல்லது 3 நாட்களின் பின்னர் விடுதலை செய்யப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதியினை அகற்றுமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போதைப்பொருள் பாவனை, இப்பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதி ஆகியவற்றின் காரணமாக இப்பிரதேச பெண்கள், சிறுவர்கள் என பலரும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதன் போது குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் இதற்கான உரிய தீர்வினை தாம் பெற்றுத்தருவதாக தெரிவித்திருந்தனர்.

இதற்கான தீர்வினை பொலிஸார் பெற்றுக்கொடுக்காத பட்சத்தில் பெருமளவில் மக்களை இணைத்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கப்படும் என பெரமுன கட்சியின் உறுப்பினர் சந்திரிக்கா தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.