தமிழ் அரசியல் கைதி ஒருவர் உயிரிழப்பு

death 1
death 1

தமிழ் அரசியல் கைதி செல்லப்பிள்ளை மகேந்திரன் என்பவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவர் 1993ம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் மகேந்திரன் கைது செய்யப்பட்டார்.

19 வயதில் கைது செய்யப்பட்ட இவரிற்கு தற்போது 46 வயதாகின்றது.

உயிரிழந்தவர் மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.