மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் பணப்பரிசு – மக்கள் பாராமுகம்

3babies
3babies

மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் அக்குடும்பத்திற்கு பணப் பரிசில் வழங்கவுள்ளதாக யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆயினும் இதுவரை யாரும் பதிவு செய்யவில்லை என வல்வெட்டித்துறை நகரபிதா கருணாகரமூர்த்தி தெரிவித்தார்.

நகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

“வல்வெட்டித்துறை நகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் தமிழ் மக்களின் இருப்பை பாதுகாப்பதற்காக 3 பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் குடும்பத்தினருக்கு மாதாந்தம் 10ஆயிரம் ரூபா மானியமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் இது தொடர்பில் எவரும் பதிவுகளை மேற்கொள்ளவில்லை” என தெரிவித்தார்.