கீரைகளின் ராணி என்று சொல்லத்தக்க கீரை பொன்னாங்கண்ணி.இது பலப் பல மருத்துவக் குணங்களை கொண்டது.
கண்பார்வைக்கு மிகவும் நல்லது
மூல நோய், மண்ணீரல் நோய்களை சரிப்படுத்தும் ஆற்றல் உடையது.
ரத்தத்தைச் சுத்தீகரிக்கும்
உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
வாய் துர்நாற்றத்தை நீக்கும்.
இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.
இக்கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம் போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப் பெறும்.