கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

11 2
11 2

தொழில்நுட்பக் கல்லூரி தொடர்ந்தும் இயங்குவதற்கு வலியுறுத்தி இன்றைய தினம் (21) கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தினால் இலங்கையில் செயற்பட்டு வருகின்ற தொழில்நுட்பக் கல்லூரிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த ஆர்ப்பாட்டம் யாழ்.கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரி உட்பட 6 தொழில்நுட்பக் கல்லூரிகளில் இடம்பெற்று வருகிறது.

இதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதுடன் எமக்கான பட்டத்தினை பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது” என தெரிவித்தனர்.

மேலும் நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழக கல்லூரிகளில் சீருடைகள் கட்டாயப் படுத்தப் படாத நிலையில் யாழ்ப்பாணத்தில் இயங்கும் பல்கலைக்கழக கல்லூரியில் மட்டும் சீருடையை கட்டாயப்படுத்தி உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.