மோசடியான காணிப்பதிவுகளை தடுக்க விசேட திட்டம்!

register
register

காணி உறுதிப்பத்திரங்களைப் பதிவுசெய்வதில் காணப்படும் மோசடிகளை இல்லாது செய்வதற்கு அவற்றை இலத்திரனியல் மென்பொருளூடாக பதிவுசெய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை பதிவாளர் நாயகம் என்.சி.விதானகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போலிக் காணி உறுதிப்பத்திரங்கள் தயாரிப்பு தொடர்பில் வருடமொன்றுக்கு சுமார் 3,000 முறைப்பாடுகள் பதிவாகின்றது.

காணி பதிவுசெய்வதற்கான புதிய மென்பொருளை அடுத்த மாதம் தொடக்கம் அறிமுகப்படுத்தவுள்ளது. மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், காணிப் பதிவுகள் விரைவுபடுத்தப்படும்” என தெரிவித்தார்.