மன்னார் தோட்டவெளி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த தூய அந்திரேயா அப்போஸ்தலர் ஆலயத்தின் உண்டியல் நேற்று (24) அதிகாலை உடைக்கப்பட்டு பெரும் தொகையான பணம் திருடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆலயத்தின் நிருவாகம் நேற்று (24) மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டதுடன் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த ஆலயத்தின் ஜன்னல் பகுதியூடாக உள்ளே சென்ற திருடர்கள் ஆலயத்தின் உள்ளே காணப்பட்ட உண்டியலின் பூட்டை உடைத்து உண்டியலில் காணப்பட்ட பெருந் தொகையான பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
உண்டியலில் காணப்பட்ட பணம் சுமார் 18 மாதங்களுக்கு மேலாக ஆலய நிருவாகத்தினரினால் எடுக்கப்படாடு குறித்த உண்டியலில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.