இந்தியாவின் 71வது குடியரசு தினம் இன்று (26) யாழ்ப்பாணத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
யாழ்.இந்திய துணைத்தூதரகத்தில் இன்று காலை 9 மணியளவில் குடியரசு தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்வில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தோர், உத்தியோகத்தர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.