கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்டோர் குணம்:மலேசியாவில் சம்பவம்

images 1
images 1

மலேசியாவில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 108 பேர் குணமாகியிருப்பதாக அந்நாட்டின் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் குறித்து அந்த நாட்டின் நல்வாழ்வுத் துறை அமைச்சக பொது இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா செய்தியாளர்கள் சந்திப்பின் போது, புதன்கிழமையன்று 142 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,908-ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம், இதுவரை கொரோனா பாதித்து சிகிச்சைக்குப் பின் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 645-ஆக உள்ளது. அதாவது 22:2 என்ற விகிதத்தில் கொரோனா நோயாளிகள் குணமடைந்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் கொரோனா பரவிய பிறகு, இன்று முதல் முறையாக ஒரே நாளில் 108 பேர் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பாதித்து இதுவரை 45 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 102 பேர் இருப்பதாகவும் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.