கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து தாம் விலகிக்கொள்ள உள்ளதாக பொது சுகாதார சேவை பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர்.
எவ்வித மேலதிக நன்மைகளையும் எதிர்பார்க்காது செயற்படும் தமது சேவையை சுகாதார அதிகாரிகள் அங்கீகரிக்கவில்லை என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸூக்கு எதிரான நடவடிக்கையின் போது தமது உயிர், தமது குடும்பத்தினரின் வாழ்க்கை என்பவற்றை பார்க்காது தாம் செயற்படுவதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு குறைப்பாடுகளுடனேயே தாம் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர்கள் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதுபோனால் ஏப்ரல் 4ஆம் திகதி முதல் கொரோனா வைரஸ் தடுப்பு திட்டத்தில் இருந்து விலகியிருக்கப்போவதாக எச்சரித்துள்ளனர்.