மூன்று மாதங்களுக்கு ஊரடங்குச் சட்டம்? அரசின் முடிவு என்ன?

hhh
hhh

இலங்கையில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், நாடு முழுவதும் குறைந்தது 3 மாதங்களுக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டொக்டர் ஜெயருவன் பண்டார கூறியுள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மூன்று மாதங்களுக்கு நாடு முடக்கப்படுவது கடினம் என்றால், குறைந்ததது 1 மாதத்திற்காவது ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட வேண்டும் என்றும் இல்லையெனில் நிலைமை மோசமாகிவிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதே போன்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகின்றது தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில், இருந்து அடுத்த கட்டத்திற்கு கொரோனா வைரஸ் விரிவடையும் அபாயத்தை நினைத்துப் பார்க்க முடியாது என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.