சிறைச் சாலையில் ஹெரோயின்: சிறைக்காவலர் கைது!

106652273 gettyimages 1066610320
106652273 gettyimages 1066610320

அனுராதபுர சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைக்காவலர் (வயது 24) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சிறைச்சாலைக்குள் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைமை சிறைக்காவலரால் இவர் கைது செய்யப்பட்டு நேற்று மாலை அனுராதபுரா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

நிட்டம்புவவில் வசிக்கும் சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.