போலியான வதந்தியை பரப்பிய ஆசிரியை கைது!

images 7
images 7

கடந்த ஏப்ரல் முதலாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுவிட்டதாக முகப்புத்தகத்தில் பதிவுசெய்த நடன ஆசிரியைக்கு விளக்கமறியல்.

இலங்கை ஜனாதிபதிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அப்போது அவருக்கு வைரஸ் உறுதிசெய்யப்பட்டதாகவும் குறித்த ஆசிரியை பதிவிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து அவர் இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு அவர் நேற்று (6) கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது அவரை விளக்கமரியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.