உள்நாட்டு விவசாயிகளை பாதுகாப்பதாக உறுதி- கோத்தாபாய

kotabaya 1 1
kotabaya 1 1

உள்நாட்டு விவசாயிகளை பாதுகாப்பதாக உறுதியளித்துள்ள பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்‌ஷ விவசாய சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே தமது அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என தெரிவித்துள்ளார்.

வெலிமடை, கெப்பெட்டிபொல பிரதேச சபை மைதானத்தில் நேற்று (Oct.25) இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;-

தமது அரசாங்கத்தின் கீழ் வௌிநாட்டு விவசாயிகள் பாதுகாக்கப்பட மாட்டார்கள் எனவும், உள்நாட்டு விவசாயிகளை பாதுகாப்பதாகவும் வெளிநாட்டு விவசாயிகளை விட உள்நாட்டு விவசாயிகளே தமக்கு முக்கியம் என தெரிவித்துள்ளார். அத்துடன், புதிய தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தி விவசாயத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக இதன்போது தெரிவித்தார்.

நேற்றைய தினம் கோத்தாபாய ராஜபக்‌ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் 10 முக்கிய விடயங்களை அடிப்படையாகக் க◌ாண்டு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.