நாட்டின் பாதுகாப்பை தாரைவார்க்க மாட்டேன்- சஜித்

s.premadasa 2
s.premadasa 2

நாட்டின் பாதுகாப்புப் பிரிவை தான் ஒருபோதும் தாரைவார்க்க மாட்டேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அம்பிலிப்பிட்டி, கொலொன்ன பிரதேசத்தில் நேற்று (26) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்கொண்டு தெரிவித்துள்ளார்.

சஜித் வந்தாலும், கோத்தாபய வந்தாலும் இராணுவத் தளபதியை நீக்கிவிடுமாறு கூறியுள்ளதாக செய்தித்தாள் ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் வந்ததற்காக ஒருபோதும் எனது இராணுவத் தளபதியை நீக்க மாட்டேன்.

அவர்கள் அவர்களது நாட்டில் உள்ள பிரச்சினைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என அப்படி இராணுவத் தளபதியை மாற்றுமாறு கூறும் நாடுகளிடம் நான் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் இந்த நாட்டில் காணப்படும் 30 வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முப்படையினர், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோருக்கு ஒருபோதும் துரோகம் இழைக்க மாட்டேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.