மக்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு ஜனாதிபதியாக செயற்படுவேன்- சஜித்

s.premadasa 1
s.premadasa 1

மக்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு ஜனாதிபதியாக தான் செயற்படப் போவதாகவும், அதுவே தனது இலக்கு எனவும் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

குண்டசாலைப் பிரதேசத்தில் இன்று (Nov.5) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

மக்களுடன் சமீபமாக செயற்பட்டு தனக்கு வாக்களித்த மக்களின் பிரச்சினைகளுக்கு 24 மணி நேரத்துக்குள் தீர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மாளிகைக்குள் சென்று கடமையாற்ற ஆரம்பிப்பதனால், வாக்களித்த மக்கள் தமது தேவையைக் கூற ஆளில்லாத ஒரு நிலைமை ஏற்படுகின்றது. இந்த நிலைமையை மாற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.