யாழ்-தமிழக விமானத்தில் வடமாகாண ஆளுநர்

suren ragavan
suren ragavan

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னை நகரத்திற்கு முதலாவதாக பயணிக்கும் எயார் இந்தியா நிறுவனத்தின் AL 9 102 பயணிகள் விமானத்தில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் சென்னைக்கு இன்று பயணமானார்.

இரு நாடுகளுக்குமிடையில் புதிய உறவுகளையும் புதிய வர்த்தக தொடர்புகளையும் இந்த விமான நிலையத்தினூடாக உருவாக்கமுடியும் என்று எதிர்பார்ப்பதாக ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இதன்போது குறிப்பிட்டார்.