முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க யாழ்ப்பாணத்திற்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்துள்ளார்.
நடைபெறவிருக்கும் ஐனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முண்ணணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள சந்திரிகா தேர்தல் பிரசார பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.
இதற்கமைய யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் கலந்து கொண்டு மக்களின் பிரச்சனைகள் தேவைகள் குறித்தும் ஆராய்ந்ததுடன் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
இச் சந்திப்பில் மதகுருமார்கள் , பொது மக்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுரைந்தனர்.