அமெரிக்காவுடன் செய்துகொள்ளவுள்ள MCC ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பு மனுக்களை விசாரணை செய்வதற்காக ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு உயர் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதான நீதவானினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற நீதிபதி புவனெக அலுவிகார நியமிக்கப்பட்டுள்ளார்.
எல்.ரி.பி தெஹிதெனிய, முர்த்து பெர்ணான்டோ, எஸ். துரைராஜ மற்றும் காமினி அமரசேகர ஆகியவர்கள் இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.