மேற்கிந்திய தீவுகள் அணி வீரரிற்கு போட்டித்தடை!

pooran
pooran

மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரரான நிக்கலஸ் பூரானிற்கு பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) நான்கு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான லக்னோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த நிக்கலஸ் பூரான் தனது கட்டை விரல் மூலம் பந்தினை சேதப்படுத்தியது போட்டிக் காணொளியில் பதிவாகியது.

இந்தக் காணொளியை ஆதாரமாக கொண்டே நிக்கலஸ் பூரான் குற்றவாளியாக இனம் காணப்பட்டு போட்டித் தடையினையும் பெற்றிருக்கின்றார்.