அரச ஊழியர்களுக்கு தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை!

thesapriya
thesapriya

நாளை மறுதினம் இடம்றெவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்கள் தகுந்த காரணங்கள் இன்றி கடமையைப் புறக்கணித்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இம்முறை தேர்தல் கடமைக்கு நியமிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்கள் நியாயமற்ற காரணங்களை ஆதாரம் காட்டி கடமையிலிருந்து தவிர்ந்து கொள்ளவுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் இப்படியான அரச ஊழியர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து ஒரு லட்சம் ரூபா தண்டப் பணமும், மூன்று வருட கால சிறைத் தண்டனையும் பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.