உண்ணாவிரதத்தினை கைவிட்டார் தேரர்

thero1
thero1

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டமையினை நிரூபிக்குமாறு உண்ணாவிரதத்தினை மேற்கொண்டிருந்த தேரர் தனது உண்ணாவிரதத்தினை கைவிட்டுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி முதல், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உண்ணாவிரதத்தினை மேற்கொண்டிருந்த கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர், தனது போராட்டத்தை இன்று (14) நிறைவு செய்துகொண்டுள்ளார்.

இந்த நிலையில், பொலிஸாரின் தெளிவுபடுத்தலுக்கு அமைய அவர் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார்.

இந்த நிலையில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ நேற்று நள்ளிரவில் சுதந்திர சதுக்கத்திற்கு விஜயம் செய்து குறித்த பிக்குவுடன் சந்திப்பை நடத்திய அவர், பின்னர் போராட்டத்தைக் கைவிடும்படி கோரிக்கை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.