மட்டக்களப்பில் சுமுகமான முறையில் வாக்களிப்பு

batti polling
batti polling

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றன.

இம்மாவட்டாத்தில் 428 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம் பெறுகிறது. இன்று காலை முதல் மிகவும் சாதகமான காலநிலை நிலவுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று தேர்தல் தொகுதிகளிலும் மொத்தமாக 3 இலட்சத்து 98 ஆயிரத்து 301 (398301) வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதில் கல்குடா தேர்தல் தொகுதியில் 115,974 பேரும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 187,672 பேரும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 94,648 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கல்முனை மற்றும் காரைதீவு பிரதேசங்களிலும் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.