இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்கவுள்ள நிலையில் பிரதமரையும் குறித்த தினத்தில் நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் மஹிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் பதவியை வழங்க தீவிர ஏற்பாடுகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று மாலை 5 மணிக்கு கூடவுள்ள அமைச்சரவை இன்றைய தினமே கலையும் முடிவை அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.