தற்போதைய அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது தொடர்பிலான இறுதித்தீர்மானம் நாளை மேற்கொள்ளப்படவுள்ளது.
நேற்றைய தினம் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த அரசாங்கத்தை தொடர்ந்தும் கொண்டு செல்ல வேண்டும் என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஒரு தீர்மானத்திற்கு வரமுடியாமையினால் எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதியுடன் பேசி இறுதித் தீர்மானத்திற்கு வரவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.