மற்றவர்களின் சொந்த விஷயங்களில் ஆர்வம் உடையவர்கள் பெண்கள்தான் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள்.
ஆனால் அண்மையில் நடந்த ஆய்வொன்று அடுத்தவர் விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் பெண்ணை விட ஆணுக்குதான் அதீத ஈடுபாடு என்கிறது.
ஆண்களில் பலர் மற்றவர்களின் சொந்த விவகாரங்களை அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பார்களாம்.
அதுவும் குறிப்பாக பெண்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்வதில் கூடுதல் ஆர்வம் என்கிறது இந்த ஆய்வு.
பெண்கள் வீட்டில் மட்டுமல்லாமல் அலுவலகத்திலும் வம்பு பேசுகிறார்கள் என்று பொதுவாக ஒரு குற்றச்சாட்டு முந்தைய காலங்களில் இருந்தது.
ஆனால் நாங்களும் சற்றும் இளைத்தவர்கள் அல்ல என்று களத்தில் இறங்கிவிட்டனர் ஆண்கள்.
எப்பாடுபட்டாவது ஒரு பெண்ணின் கவனத்தைப் பெறுவதற்காகத்தான் இப்படி செய்கிறார்களாம்.
ஆனால் இத்தகைய ஆண்களிடமிருந்து ஒரு அடி தள்ளியே இருப்பது நல்லது. ஒருவரைப் பற்றி மற்றவர்களிடம் புரணி பேசும் இயல்பு மனிதர்களிடம் பல காலமாகவே இருந்து வருகிறது.
பெண்களே, உங்களுடைய குடும்ப விவகாரங்கள், சொந்தப் பிரச்னைகள், பணப் பிரச்னைகள் என எந்த விஷயத்தையும் பொதுவான இடங்களில் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
எப்போதும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது ஒரே ஒரு விஷயம்தான் வீட்டினரைத் தவிர வேறு யாரும் வாழ்க்கையில் நம்பிக்கையானவராக இருக்க முடியாது.
இது ஆண்களுக்கும் பொருந்தும். அந்த மனரீதியான ஆய்வறிக்கை இப்படி பல விஷயங்களை அலசி ஆராய்கிறது.