மீண்டும் தலைமையேற்கும் சிறிசேன

sirisean 1
sirisean 1

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மீண்டும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன நடுநிலை வகித்தமையினால் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை அக்கட்சியின் பதில் தலைவராக மூத்த உறுப்பினர் ரோஹண லக்ஷமன் பியதாச நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் இன்று (Nov.19) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பணிகளை ஆரம்பித்துள்ளார்.