ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சபாநாயகராக செயற்படுகின்ற கருஜயசூரியவிடம் வழங்கப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தற்காலிக தலைவராக கரு ஜயசூரியவை நியமிக்க, தற்போதைய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளதாகவும் அத்துடன் விரைவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் நடவடிக்கைகள் கரு ஜயசூரியவினால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை கரு ஜயசூரிய செயற்படுவார் எனவும் குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.