இலங்கையர் எனும் பதத்தினுள் அழியும் தமிழர்கள்

kajenthirakumar
kajenthirakumar

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின் பதவியேற்பின் போது ‘இலங்கையர்’ என்ற பதத்தினை எப்போதும் தமிழ்மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்.கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இலங்கையர் எனும் பதத்தினூடாக தமிழ்மக்கள் சிங்கள- பெளத்த நாடு எனும் அடையாளத்திற்குள் கரைந்து போவதாக தெரிவித்துள்ளார்.

எங்களைப் பொறுத்த வரை கோத்தாபயவின் கருத்துடன் நாம் இணங்க முடியாது.

சிங்கள தேசத்துடன் தமிழ்த்தேசத்துடன் இணைந்து பயணிப்பதில் எந்தவிதமான தடைகளும் இருக்கக் கூடாதெனில் தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்டு, தமிழ்த்தேசத்தின் இருப்பு அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்.

தமிழ்த்தேசம் பாதுகாப்பாக இந்தத் தீவிலிருக்கலாம் என உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரம் தான் அந்தப் பயணம் நேர்மையானதும், உண்மையானதுமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.