முன்னாள் பிரதமரிற்கு அஞ்சலி செலுத்தச் சென்ற நபர் சடலமாக மீட்பு

d.m jeyaratne
d.m jeyaratne

முன்னாள் பிரதமர் தி.மு ஜயரட்னவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற நபரொருவர் 05 நாட்களின் பின்னர் சடலமாக திங்கட்கிழமை (Nov.25) மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;

தொளுவை புதிய குருகெலே கிராமத்தைச் சேர்ந்த 48 வயதான ஒருவர் கடந்த 21 ஆம் திகதி, மறைந்த முன்னாள் பிரதமர் தி.மு ஜயரட்னவின் தொளுவை இல்லத்துக்கு அஞ்சலி செலுத்தச் செல்வதாக தாயிடம் தெவித்து தனது முச்சக்கர வண்டியில் சென்றிருந்தார்.

இந் நிலையில் காணாமல் போன குறித்த நபர் 36 அடி ஆழமான பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து நேற்றுமுன்தினம் (Nov.25) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

கம்பளை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.