இலங்கையில் பிறந்த தமிழ்ப் பெண்ணான, கன்னி விக்னராஜா ஐ.நா அபிவிருத்தித் திட்டத்தின் (யுஎன்டிபி) ஆசிய -பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளராக பதவியேற்கவுள்ளார்.
நாளை டிசம்பர் 1ஆம் திகதி இவர் பதவியேற்கவுள்ளார்.
முன்னதாக இவரை ஐ.நா பொதுச்செயலாளர் அன்ரனியோ குட்ரெஸ், ஐ.நா அபிவிருத்தித் திட்டத்துக்கான உதவி செயலாளர் நாயகமாகவும், உதவி நிருவாகியாகவும் நியமித்திருந்தார்.
கன்னி விக்னராஜா ஐ.நா முறைமைகளில் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக நீண்டகால அனுபவம் கொண்டவராவார்.
இவர் யுஎன்டிபியின் நாடு, பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் ஆசிய மற்றும் ஆபிரிக்க கண்டங்களில் பணியாற்றியுள்ளார்.
இலங்கையில் பிறந்த கன்னி விக்னராஜா பிறின்ஸ்ரென் பல்கலைக்கழகத்தில் பொது நிருவாகத்துறையில் முதுமாணி பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் Bryn Mawr கல்லுரியில் பொருளாதாரத் துறையில் இளமாணி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.