இலங்கை இறைமை பொருந்திய நாடு எனவும் அதன் அடையாளத்தை இந்தியா, சீனா போன்ற நாடுகள் மதிக்க வேண்டும் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இதனை தனது டுவிட்டர் தளத்தினூடாக தெரிவித்துள்ளார். அதில் அவர்,
“ இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட உலகளாவிய சக்திகளை- உங்கள் நம்பிக்கையை வைத்து, எங்கள் எதிர்காலத்தில் முதலீடு செய்ய அழைக்கிறேன்.
அதேவேளை, ஒரு இறையாண்மை கொண்ட தேசமாக எங்கள் தனித்துவமான அடையாளத்தை மதிக்க வேண்டும் என்று” அவர் குறிப்பிட்டுள்ளார்.