மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருந்து ஸ்பெயின் நோக்கி புறப்பட்ட சுமார் 150 அகதிகளை உள்ளடக்கிய படகு கவிழ்ந்ததில் 59 பேர் பலியாகியுள்ளனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் மவுரித்தானியா கடலோர காவல்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 74 பேரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
மேலும் 18 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது.