இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி ,இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கிடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன் போது அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்டார்.
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்குமிடையிலான இருதரப்பு தொடர்புகளை வலுப்படுத்தி, புதிய குறிக்கோளுடன் முன்னோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.