கொழும்பு துறைமுக நகர திட்டம் முதலீட்டுக்காக இன்று மாலை திறக்கப்படவுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இது தொடர்பான விசேட வைபவம் துறைமுக நகர வளவில் இடம்பெறவிருப்பதாக நகர அபிவருத்தி, வீடமைப்பு வசதிகள, நீர் வழங்கல் அமைப்பின் செயலாளர் கலாநிதி பிரியாத் பந்து விக்கிரம தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக நகர திட்டம் நேரடி வெளிநாட்டு முதலீட்டு அடிப்படையில் முன்னெடுக்கப்படும் பாரிய திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.